காலம்: கிருத்துவிற்கு முன்னால் 100 முதல்
கிருத்துவிற்குப் பின்னால் 150ஆண்டுகள் வரை வாழ்ந்தார்.
பாண்டியமன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின்
அரசகுருவாக இருந்தவர்.
போர்முறையே தெரியாத உயர்ந்த நாகரிகத்தை உடைய
மக்கள் வாழ்க்கைமுறையை உருவாக்கியவர்.
இவரது காலத்தில்தான் இமயமலையில் வாழ்ந்த
பிராகிருத மொழி பேசும் களப்பிறர்களும்,
கங்கை கடலோடு கலக்கும் துறை முகத்தில் வாழ்ந்த
பாலி மொழி பேசும் களப்பிறர்களும் கடல்வழியாக
படை எடுத்துவந்து, மதுரை மாநாகரினை அழித்தனர்.
அப்போது கோவலன் கொலையுண்ட நிகழ்ச்சியும் அன்னிய
படையெடுப்பிற்கு பேருதவியாகியது.
மதுரை எரிந்து சிதைந்ததால் மூன்றாவது மதுரை தமிழ்ச்சங்கத்தின்
மூலம் இவர்தம் காலத்தில் இருந்தஎல்லா தமிழ் நூல்களையும்
கூலவாணிகன் சீத்தலைசாத்தனாரைகொண்டு கரந்தமலையில்
இவரைத் தங்கவைத்து சங்க இலக்கியங்களை தொகுத்திட்டார்.
இவரே சிதம்பரத்தில் உள்ள கூத்தப்பெருமான் சிலையையும்
ஐம்பொன்னால் வார்த்து எடுத்ததாகவும் குறிப்பு உள்ளது.
மூன்றாவது மதுரை தமிழ்ச்சங்கத்தின் மூலம் இவர்தம் காலத்தில்
இருந்த எல்லா தமிழ் நூல்களையும் கூலவாணிகன் சீத்தலைசாத்தனாரை
கொண்டு தொகுத்திட்டார்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,பதினெண்மேல்கணக்கு நூல்கள்,
ஐம்பெரும்காப்பியங்கள்,அண்டபேரண்டத்தமிழ்,...இன்னும் பல
நூல்களை சீத்தலைசாத்தனாரை கரந்தமலையில் தங்கவைத்து சங்க இலக்கியங்களை தொகுத்திட்டார்.
கருவூறார் நிறைவு பெற்றஇடம்:கருவூர்ப் பசுபதீஸ்வரர் ஆலயம்.
இந்துவேத முன்னேற்றக்கழகத்தை தொடங்கியவர்,
அருஉருவச்சித்திபெற்றவர்,
அமராவதியாற்றின் நீரில் தோன்றியவர்.
இவரது காலத்தில் மதுரையை கடல்கோளில் இருந்து
காப்பாற்றவும், மதுரை மூன்றாம் தமிழ் சங்க நூல்களை
காப்பாற்றவும், அதனை பிற்காலத்தமிழ்ச்சமுதாயம்
தெரிந்துகொள்ள உதவியவர்.
தமிழை காக்க இவர் வாழ்ந்தபோது,
பிறமண்ணினரின் சதியால்!
எண்ணிலாத்தமிழர்களின் நாக்கு அறுக்கப்பட்டது,
தமிழ்நூல்கள் எரிக்கப்பட்டதுடன்,
தமிழில் பேசினால் தண்டனை தரப்பட்டது
தமிழர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்.
சமசுகிருதம் மட்டுமே ஆட்சிமொழியாக கடைப் பிடிக்கப்பட்டது !
காலத்தின் சூழ்ச்சியா!சுழற்ச்சியா!
மீண்டும் மேல குறிப்பிட்டதற்கு சமமான நிகழ்வு
அண்மையில் நிறைவேறியது.
அவரது சமாதுக் கோவிலில் கடந்த எட்டு ஆண்டுகளாக
தமிழ்மொழியில் நடத்தப்பட்ட முழுநிலவு யாகம்,
சுமார் இரண்டு ஆண்டுகளாகநிறுத்தப்பட்டு,
கடந்த மாதம் சம்ஸ்கிருத முறையிலே குடமுழுக்கு நடத்தப்பட்டது !
இதுதமிழின வீழ்ச்சியா ! எழுச்சியா ! சிந்திப்பீர்! தமிழ்ச்சமுதாயமே !
தமிழர் நாகரிகம் மற்றும் தமிழ் வரலாற்றின் கலியுகத்தின் முன்னோடித்தமிழனுடைய வரலாற்று செய்தியை
தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வரலாற்று ஆய்வாளர்களின்
பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றேன்!
சித்தர் கருவூறார் அருளிய சத்தி காயந்திரி மந்தரதிற்கு முதன் முறையாக இசை அமைக்கப்பட்டுள்ளது. வாங்கி
ReplyDeleteபயனடைவீர் . தொடர்புக்கு M .G . பாலா 9345342424